பயணங்கள் முடிவதில்லை!
#பயணங்கள்முடிவதில்லை! நாம் வாழ்க்கையே பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட ஒரு சிறிய பயணமே! ஒவ்வொரு சாமானிய மனிதர்களும் தினம்தோறும் பல்வேறு இடங்களில் பலதரப்பட்ட காரணங்களுக்காக பயணித்து கொண்டுதானிருக்கிறார்கள். சிலர் வேலை நிமித்தமாக வெளியூர் செல்வர்,சிலர் வணிக விருத்திக்காக வெளிநாடுகள் பறப்பர், ஒரு சிலர் திருமணம் , பண்டிகை போன்ற விசேஷகளுக்காக உறவினர்களை சந்திக்க பல ஊர் செல்வர் , மேற்படிப்பு சம்மந்தமாக ஊர்விட்டு ஊரோ, ஏன் வசதி வாய்ந்ததவர்கள் நாடு விட்டு நாடு சென்று படிப்பது வழக்கம் . இறை நம்பிக்கை உள்ளவர்கள் அவரவர்கள் நம்பிக்கைக்கிணங்க புனித பயணம் மேற்கொள்வது , விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணம் ,புதிதாக திருமணம் ஆனாவர்கள் தனிமை எனும் “பிரைவசி” வேண்டி தேனிலவு பயணம் மற்றும் மருத்துவ ரீதியான காரணங்களுக்கு பயணம் என பயணங்கள் ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையில் பல பயனுள்ள வகையில் அமைகின்றன. நாம் பயணிக்க எந்த காரணமும் இல்லை என்றாலும் குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒரு முறையாவது நாம் அதுவரை போகாத ஒரு புதிய இடத்திற்கு சென்று திரும்புவது நமது மன நிலையை மேம்பாட்டு உதவும் என புத்த பிட்சு "தலாய் லாமா...