பயணங்கள் முடிவதில்லை!
#பயணங்கள்முடிவதில்லை!
நாம் வாழ்க்கையே பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட ஒரு சிறிய பயணமே! ஒவ்வொரு சாமானிய மனிதர்களும் தினம்தோறும் பல்வேறு இடங்களில் பலதரப்பட்ட காரணங்களுக்காக பயணித்து கொண்டுதானிருக்கிறார்கள்.
சிலர் வேலை நிமித்தமாக வெளியூர் செல்வர்,சிலர் வணிக விருத்திக்காக வெளிநாடுகள் பறப்பர், ஒரு சிலர் திருமணம் , பண்டிகை போன்ற விசேஷகளுக்காக உறவினர்களை சந்திக்க பல ஊர் செல்வர் , மேற்படிப்பு சம்மந்தமாக ஊர்விட்டு ஊரோ, ஏன் வசதி வாய்ந்ததவர்கள் நாடு விட்டு நாடு சென்று படிப்பது வழக்கம் .
இறை நம்பிக்கை உள்ளவர்கள் அவரவர்கள் நம்பிக்கைக்கிணங்க புனித பயணம் மேற்கொள்வது , விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணம் ,புதிதாக திருமணம் ஆனாவர்கள் தனிமை எனும் “பிரைவசி” வேண்டி தேனிலவு பயணம் மற்றும்
மருத்துவ ரீதியான காரணங்களுக்கு பயணம் என பயணங்கள் ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையில் பல பயனுள்ள வகையில் அமைகின்றன.
நாம் பயணிக்க எந்த காரணமும் இல்லை என்றாலும் குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒரு முறையாவது நாம் அதுவரை போகாத ஒரு புதிய இடத்திற்கு சென்று திரும்புவது நமது மன நிலையை மேம்பாட்டு உதவும் என புத்த பிட்சு "தலாய் லாமா" அவர்கள் கூறியுள்ளார்.
நீண்ட பயணங்கள் மேற்கொள்ளும் போது இஸ்லாம் மார்க்கத்தில் ஐந்து வேளை தொழுகையின் “ரக்காத்துகளை” கூட பாதியாக குறைத்து நபிகளார் அவர்கள் கட்டளையிட்டது அந்தக்காலத்தில் அவர்கள் பயணித்தின் போது பட்ட கஷ்டங்களை நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல நமக்கு உணர்த்துகிறது.
பயணங்கள் சிறந்த வகையில் அமைத்து கொள்ள அதை நல்ல முறையில் திட்டமிட்டு முன்னேற்பாடுகளோடு பயணிப்பவர்கள் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை சங்கடமே இல்லாமல் எளிதாக சமாளித்து அதை வெற்றி பயணம் ஆக்கிக்கொள்ளலாம்.
பயணம் என்றாலே அதில் உள்ளூர அடங்கி இருக்கும் ப(ய)ணம் மிக்க தேவையான ஒன்று. பட்ஜெட் போட்டு பயணிப்பது அனாவசிய பயண செலவுகளை குறைக்கும். பட்ஜெட் எப்படி போடுவது? ஆம் அது சம்மந்தப்பட்ட பயணத்தை பொறுத்தது. பயண பட்ஜெட்க்கு முக்கியமாக ஒரு நாளைக்கு தேவையான அத்தியாவசியப் செலவுகளை கணக்கிட்டு அதை எத்தனை நாள் பயணிக்கிறோமோ அதனோடு பெருக்கி வரும் தொகையை இரட்டிப்பாக்கி எடுத்து சென்றால் பயணத்தின் போது பண தட்டுபாடின்றி பயணத்தை கண்ணிய முறையில் முடித்து விட்டு வரலாம்.
பயணங்கள் சிறந்த வகையில் அமையவும் நம் வாழும் காலம் வரையில் என் நெஞ்சில் நிறைந்திருக்கவும் ஒரு சில பயனுள்ள குறிப்புகள் கீழ்வருமாறு.
பயணத்தின் தூரத்தை வைத்து நம் பயணிக்கும் வாகனத்தை முடிவு செய்ய வேண்டும். மகிழுந்து பேருந்து, புகைவண்டி மற்றும் விமானம் என வாகனத்தை அவர்கள் பயணிக்கும் தூரத்தையும் வசதியை பொறுத்தும் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
பயணித்தின் போது குறைந்த அளவு “லக்கெஜ்” வைத்து கொள்வது பயணத்தை எளிதாக்கும் இனிதாக்கும்.
பயணங்களின் போது இறுகிய ஆடைகளை தவிர்த்து மிக எளிமையான உடைகளை அணிதல் சிறப்பு.
பயண சம்மந்தப்பட்ட ஆவனங்கள் பாஸ்போர்ட் , விசா , ஏர் டிக்கெட்... முன்பதிவு ஆகியவற்றின் காலாவதி (Expiry date) ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
நாம் பயணிக்கும் இடத்தின் பருவ நிலை, தட்பவெப்பம் மற்றும் சிறப்புகள், உணவு ,மொழி, கலாச்சாரம் பற்றி ஒரு சிறு குறிப்பு எடுத்து கொள்ள வேண்டும்.
தங்கும் விடுதி , ஓட்டல் , பயண டிக்கெட் முன்பதிவு செய்து கொள்வது அவசியமாகும்.
விமான பயணம் எனில் நாம் கையில் எடுத்து செல்லும் லக்கெஜ் 7 கிலோவுக்கு குறைவாக இருக்க வேண்டும். பயணப்படும் நாட்டிலுள்ள சட்டதிட்டங்களுக்கு ஏற்ப தடை செய்யப்பட்ட பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். இல்லையேல் தேவையற்ற சுங்க இலாகவின் கெடுபிடிக்கு ஆளாக வேண்டி வரும். சில நேரங்களில் சிறை செல்லக்கூடிய வாய்ப்புகளும் உள்ளது .எனவே தடை செய்யப்பட்ட பொருட்களை பற்றி அறிந்து அதற்கேற்ப நமது உடைமை (லக்கெஜ்) அமைத்து கொள்ள வேண்டும்.
பணத்தை குறைந்த அளவே கையில் வைத்து கொண்டு மீதியை டிரவலர் செக் அல்லது டிபிட் / கிரடிட் கார்டுகள் எடுத்து செல்வது திருடு, பிக்பாக்கெட் போன்ற எதிர்பாராத சிக்கல்களில் சிக்காமல் தப்ப உதவும்.
தினசரி மருந்து சாப்பிடுபவர்கள் தேவையான மருந்துகளை கையோடு எடுத்து சொல்லதல் சாலச்சிறந்தது.
ஹோட்டல்களில் செக் அவுட் செய்யும் போதோ அல்லது ஒரு இடத்தை விட்டு வேறு இடத்திற்கு போவதற்கு முன் நம் உடைமை பொருட்கள் லக்கெஜ் மற்றும் பர்ஸ் ,பாஸ்போர்ட் ,டிக்கெட் ஆகியவற்றை ஒரு முறைக்கு பல முறை சரி பார்ப்பது அவசியம்.
விலை உயர்ந்த பொருட்கள் , கைக்கடிகாரம் ,தங்க நஙைகள் ஆபரணங்கள் தவிர்க்க வேண்டும். அது நமது உயிருக்கே ஒரு சிலசமயங்களில் ஊறு விளைவிக்கும் வகையில் அமைந்துவிடும்.
பயணித்தின் போது நேரம் பேணுதல் அவசியம். நமக்காக பேருந்தோ , ரயிலோ , விமானமோ ஒரு நாளும் காத்திருக்காது.
பயணத்தின் போது தேவைக்கு அதிகமாக உணவு உண்பது தேவையற்ற உடல் உபாதைகளை உண்டாக்கும். மாறாக நிறைய சுத்திகரிப்பட்ட தண்ணீர் , பழம் மற்றும் பழரசங்களை பயன்படுத்தலாம்.
சுற்றுலா தளங்களில் உணர்ச்சிவசப்பட்டு தேவையற்ற பொருட்களை வாங்குதல் தவிர்க்க வேண்டும். சில சமயம் அது நம்மை நமது பட்ஜெட்டை மீறி செலவு செய்து விடும்.
நல்ல உணவகங்களை நமது பட்ஜெட்டிற்கு தகுந்தாற்போல தேர்ந்தெடுத்து உண்ணுதல் வேண்டும். எல்லா விலை உயர்ந்த உணவகங்களும் தரமான உணவை தரும் என உத்தரவாதம் தர முடியுமா?
முக்கியமான தொலை பேசி எண்களை ஒரு டைரியில் குறித்து அவசர தேவைகளுக்கு கையிலே லைத்திருப்பது அவசியம். காரணம் பேட்டரி போனால் மொபைல் போன்கள் உதவாது.
பயணத்தின் போது தேவைப்பட்டால் மருத்துவ & பயண உடைமை காப்பீடு செய்துகொள்வது நல்லது.
நம்மை நஷ்டத்தில் இருந்து காத்துகொள்ள அந்நிய செலாவணி மாற்றும் தேவை இருப்பின் அதை உள்நாட்டிலேயே மாற்றி எடுத்து செல்ல வேண்டும். சில நாடுகளில் சில நாட்டின் பணம் செல்லாது அல்லது அவர்கள் குறைவான மதீப்பீடு செய்து அந்நிய செலவாணி கிடைக்கும்.கள்ள நோட்டு பிரச்சினைகளின் இருந்து தப்பிக்க கரண்சி மாற்றிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். அது பல்வேறு தர்ம சங்கடங்களிலிருந்து நம்மை காக்கும்.
எல்லாவற்றிக்கும் மேலாக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகையை பயணத்திற்கு முன்பே தானமாக இயலாதவர்க்கு கொடுத்து
செல்வது நமக்கு பல்வேறு சங்கடங்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும்.
நூரேஸ்கே - ஷார்ஜா அமீரகம்
நாம் வாழ்க்கையே பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட ஒரு சிறிய பயணமே! ஒவ்வொரு சாமானிய மனிதர்களும் தினம்தோறும் பல்வேறு இடங்களில் பலதரப்பட்ட காரணங்களுக்காக பயணித்து கொண்டுதானிருக்கிறார்கள்.
சிலர் வேலை நிமித்தமாக வெளியூர் செல்வர்,சிலர் வணிக விருத்திக்காக வெளிநாடுகள் பறப்பர், ஒரு சிலர் திருமணம் , பண்டிகை போன்ற விசேஷகளுக்காக உறவினர்களை சந்திக்க பல ஊர் செல்வர் , மேற்படிப்பு சம்மந்தமாக ஊர்விட்டு ஊரோ, ஏன் வசதி வாய்ந்ததவர்கள் நாடு விட்டு நாடு சென்று படிப்பது வழக்கம் .
இறை நம்பிக்கை உள்ளவர்கள் அவரவர்கள் நம்பிக்கைக்கிணங்க புனித பயணம் மேற்கொள்வது , விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணம் ,புதிதாக திருமணம் ஆனாவர்கள் தனிமை எனும் “பிரைவசி” வேண்டி தேனிலவு பயணம் மற்றும்
மருத்துவ ரீதியான காரணங்களுக்கு பயணம் என பயணங்கள் ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையில் பல பயனுள்ள வகையில் அமைகின்றன.
நாம் பயணிக்க எந்த காரணமும் இல்லை என்றாலும் குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒரு முறையாவது நாம் அதுவரை போகாத ஒரு புதிய இடத்திற்கு சென்று திரும்புவது நமது மன நிலையை மேம்பாட்டு உதவும் என புத்த பிட்சு "தலாய் லாமா" அவர்கள் கூறியுள்ளார்.
நீண்ட பயணங்கள் மேற்கொள்ளும் போது இஸ்லாம் மார்க்கத்தில் ஐந்து வேளை தொழுகையின் “ரக்காத்துகளை” கூட பாதியாக குறைத்து நபிகளார் அவர்கள் கட்டளையிட்டது அந்தக்காலத்தில் அவர்கள் பயணித்தின் போது பட்ட கஷ்டங்களை நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல நமக்கு உணர்த்துகிறது.
பயணங்கள் சிறந்த வகையில் அமைத்து கொள்ள அதை நல்ல முறையில் திட்டமிட்டு முன்னேற்பாடுகளோடு பயணிப்பவர்கள் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை சங்கடமே இல்லாமல் எளிதாக சமாளித்து அதை வெற்றி பயணம் ஆக்கிக்கொள்ளலாம்.
பயணம் என்றாலே அதில் உள்ளூர அடங்கி இருக்கும் ப(ய)ணம் மிக்க தேவையான ஒன்று. பட்ஜெட் போட்டு பயணிப்பது அனாவசிய பயண செலவுகளை குறைக்கும். பட்ஜெட் எப்படி போடுவது? ஆம் அது சம்மந்தப்பட்ட பயணத்தை பொறுத்தது. பயண பட்ஜெட்க்கு முக்கியமாக ஒரு நாளைக்கு தேவையான அத்தியாவசியப் செலவுகளை கணக்கிட்டு அதை எத்தனை நாள் பயணிக்கிறோமோ அதனோடு பெருக்கி வரும் தொகையை இரட்டிப்பாக்கி எடுத்து சென்றால் பயணத்தின் போது பண தட்டுபாடின்றி பயணத்தை கண்ணிய முறையில் முடித்து விட்டு வரலாம்.
பயணங்கள் சிறந்த வகையில் அமையவும் நம் வாழும் காலம் வரையில் என் நெஞ்சில் நிறைந்திருக்கவும் ஒரு சில பயனுள்ள குறிப்புகள் கீழ்வருமாறு.
பயணத்தின் தூரத்தை வைத்து நம் பயணிக்கும் வாகனத்தை முடிவு செய்ய வேண்டும். மகிழுந்து பேருந்து, புகைவண்டி மற்றும் விமானம் என வாகனத்தை அவர்கள் பயணிக்கும் தூரத்தையும் வசதியை பொறுத்தும் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
பயணித்தின் போது குறைந்த அளவு “லக்கெஜ்” வைத்து கொள்வது பயணத்தை எளிதாக்கும் இனிதாக்கும்.
பயணங்களின் போது இறுகிய ஆடைகளை தவிர்த்து மிக எளிமையான உடைகளை அணிதல் சிறப்பு.
பயண சம்மந்தப்பட்ட ஆவனங்கள் பாஸ்போர்ட் , விசா , ஏர் டிக்கெட்... முன்பதிவு ஆகியவற்றின் காலாவதி (Expiry date) ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
நாம் பயணிக்கும் இடத்தின் பருவ நிலை, தட்பவெப்பம் மற்றும் சிறப்புகள், உணவு ,மொழி, கலாச்சாரம் பற்றி ஒரு சிறு குறிப்பு எடுத்து கொள்ள வேண்டும்.
தங்கும் விடுதி , ஓட்டல் , பயண டிக்கெட் முன்பதிவு செய்து கொள்வது அவசியமாகும்.
விமான பயணம் எனில் நாம் கையில் எடுத்து செல்லும் லக்கெஜ் 7 கிலோவுக்கு குறைவாக இருக்க வேண்டும். பயணப்படும் நாட்டிலுள்ள சட்டதிட்டங்களுக்கு ஏற்ப தடை செய்யப்பட்ட பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். இல்லையேல் தேவையற்ற சுங்க இலாகவின் கெடுபிடிக்கு ஆளாக வேண்டி வரும். சில நேரங்களில் சிறை செல்லக்கூடிய வாய்ப்புகளும் உள்ளது .எனவே தடை செய்யப்பட்ட பொருட்களை பற்றி அறிந்து அதற்கேற்ப நமது உடைமை (லக்கெஜ்) அமைத்து கொள்ள வேண்டும்.
பணத்தை குறைந்த அளவே கையில் வைத்து கொண்டு மீதியை டிரவலர் செக் அல்லது டிபிட் / கிரடிட் கார்டுகள் எடுத்து செல்வது திருடு, பிக்பாக்கெட் போன்ற எதிர்பாராத சிக்கல்களில் சிக்காமல் தப்ப உதவும்.
தினசரி மருந்து சாப்பிடுபவர்கள் தேவையான மருந்துகளை கையோடு எடுத்து சொல்லதல் சாலச்சிறந்தது.
ஹோட்டல்களில் செக் அவுட் செய்யும் போதோ அல்லது ஒரு இடத்தை விட்டு வேறு இடத்திற்கு போவதற்கு முன் நம் உடைமை பொருட்கள் லக்கெஜ் மற்றும் பர்ஸ் ,பாஸ்போர்ட் ,டிக்கெட் ஆகியவற்றை ஒரு முறைக்கு பல முறை சரி பார்ப்பது அவசியம்.
விலை உயர்ந்த பொருட்கள் , கைக்கடிகாரம் ,தங்க நஙைகள் ஆபரணங்கள் தவிர்க்க வேண்டும். அது நமது உயிருக்கே ஒரு சிலசமயங்களில் ஊறு விளைவிக்கும் வகையில் அமைந்துவிடும்.
பயணித்தின் போது நேரம் பேணுதல் அவசியம். நமக்காக பேருந்தோ , ரயிலோ , விமானமோ ஒரு நாளும் காத்திருக்காது.
பயணத்தின் போது தேவைக்கு அதிகமாக உணவு உண்பது தேவையற்ற உடல் உபாதைகளை உண்டாக்கும். மாறாக நிறைய சுத்திகரிப்பட்ட தண்ணீர் , பழம் மற்றும் பழரசங்களை பயன்படுத்தலாம்.
சுற்றுலா தளங்களில் உணர்ச்சிவசப்பட்டு தேவையற்ற பொருட்களை வாங்குதல் தவிர்க்க வேண்டும். சில சமயம் அது நம்மை நமது பட்ஜெட்டை மீறி செலவு செய்து விடும்.
நல்ல உணவகங்களை நமது பட்ஜெட்டிற்கு தகுந்தாற்போல தேர்ந்தெடுத்து உண்ணுதல் வேண்டும். எல்லா விலை உயர்ந்த உணவகங்களும் தரமான உணவை தரும் என உத்தரவாதம் தர முடியுமா?
முக்கியமான தொலை பேசி எண்களை ஒரு டைரியில் குறித்து அவசர தேவைகளுக்கு கையிலே லைத்திருப்பது அவசியம். காரணம் பேட்டரி போனால் மொபைல் போன்கள் உதவாது.
பயணத்தின் போது தேவைப்பட்டால் மருத்துவ & பயண உடைமை காப்பீடு செய்துகொள்வது நல்லது.
நம்மை நஷ்டத்தில் இருந்து காத்துகொள்ள அந்நிய செலாவணி மாற்றும் தேவை இருப்பின் அதை உள்நாட்டிலேயே மாற்றி எடுத்து செல்ல வேண்டும். சில நாடுகளில் சில நாட்டின் பணம் செல்லாது அல்லது அவர்கள் குறைவான மதீப்பீடு செய்து அந்நிய செலவாணி கிடைக்கும்.கள்ள நோட்டு பிரச்சினைகளின் இருந்து தப்பிக்க கரண்சி மாற்றிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். அது பல்வேறு தர்ம சங்கடங்களிலிருந்து நம்மை காக்கும்.
எல்லாவற்றிக்கும் மேலாக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகையை பயணத்திற்கு முன்பே தானமாக இயலாதவர்க்கு கொடுத்து
செல்வது நமக்கு பல்வேறு சங்கடங்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும்.
நூரேஸ்கே - ஷார்ஜா அமீரகம்
Comments
Post a Comment