ஊர்களின் பெயர்கள்
#தமிழ்நாட்டின் #ஊரின் #பெயர்களில் உள்ள பொதுமையான கூற்றுகளை பற்றி அலசும் பதிவு இது.
பொதுவாக நம் மாநிலத்தின் ஊரின் பெயர்கள் பெரும்பலும் ஊர்,பட்டி,பாளையம்,புரம்,ஏரி,பட்டு,குறிச்சி,மலை,,பாடி, புரி, நல்லூர் குடி, பேட்டை,கிரி பள்ளி,காடு,குடி,தாங்கல், குன்றம், பாக்கம் ஆகியவற்றை கொண்டே பெற்று முற்று பெறும்.
உதாரணமாக ஊரை பின்னோட்டோமாக வரும் சில ஊரின் பெயர்கள் பின்வருமாறு பதியலாம் .
ஆத்தூர், கடலூர், கூடலூர் கோயம்புத்தூர்,திருக்கோவிலூர், முதலூர்,திருப்பூர்,வேலூர்,போளூர்தஞ்சாவூர்,
"பட்டி" யை விகுதியாக கொண்ட சில ஊரின் பெயர்களுக்கு உதாரணமாக:
வாடிப்பட்டி
ஆண்டிபட்டி
கொட்டாம்பட்டி
கஜல்நாயக்கன்பட்டி
சின்னாளப்பட்டி
வடுகப்பட்டி
பாளையத்தை இறுதி வடிவமாக கொண்ட பல ஊர்கள் :
எடப்பாளையம்
கீரிப்பாளையம்
நரிப்பாளையம்
வண்டிப்பாளையம்
அத்திப்பாளையம்
"புரம்" என்பதை ஊரின் இறுதியில் வரும் சில ஊர்களுக்கு உதாரணமாக
விழுப்புரம்,காஞ்சிபுரம்,காந்திபுரம்,
மகாபலிபுரம் என கொள்ளலாம்.
"ஏரியை" பெயரின் இறுதி வடிவமாக கொண்ட பல ஊர்கள் இதோ சில : கூடுவாஞ்சேரி
பாண்டிச்சேரி,வேளச்சேரி,
"பட்டு" என முடியும் சில ஊரின் பெயர்கள்: செங்கல்பட்டு ,சேத்துப்பட்டு,கல்பட்டு,அத்திபட்டு
"குறிச்சி" யை கொண்டு முடியும் ஊர்களுக்கு உதாரணமாக கள்ளக்குறிச்சி, அரவக்குறிச்சி, சூலாங்குறிச்சி என்பன சில.
"மலை"யை கொண்டு முடியும் ஊர்களுக்கு உதாரணமாக திருவண்ணாமலை, சின்னமலை , ஏலமலை,கொல்லிமலை என சில பெயர்களை குறிப்பிடலாம்.
"பாடி"க்கு உதாரணமாக தானிப்பாடி,வாணியம்பாடி, புள்ளம்பாடி, கண்ணம்பாடி.
"புரி" யை கொண்டு முடியும் ஊர்களுக்கு உதாரணமாக தருமபுரி ,சிங்கபுரியும் "நல்லூர்" கொண்டு முடியும் ஊர்களுக்கு உதாரணமாக திருவெண்ணெய்நல்லூர், "குடி"க்கு உதாரணமாக திட்டக்குடி, தூத்துக்குடி, பேட்டைக்கு உதாரணமாக பரங்கிப்பேட்டை, சிங்காரப்பேட்டை, வண்ணார்பேட்டை போன்றன.
கிரியை கொண்டு முடியும் பெயர்களை பட்டியலிட்டு பார்த்தால் நிலகிரி, ஏலகிரி , கிருஷ்ணகிரி, புவனகிரி ஆகியவற்றை நாம் சொல்லலாம்.
"பள்ளி" யை கொண்டு முற்று பெறும் ஊர்களுக்கு உதாரணமாக
திருச்சிராப்பள்ளி, நரிப்பள்ளி யை நினைவு கூறலாம்.
"காடு" என்பதை கொண்டுமுடியும் ஊர் சில: குடிக்காடு அரவங்காட்டையும்
"தாங்கல்" என முடியும் சில பொதுவான பெயரகளுக்கு ஈக்காட்டுதாங்கல், வேடந்தாங்கல்,
"குன்றம்" என முடியும் சில ஊர்களுக்கு: திருப்பரங்குன்றம், செங்குன்றம் .
"பாக்கம்' என முடியும் ஊருக்கு உதாரணமாக விருகம்பாக்கம், அத்திபாக்கம், கேளம்பாக்கம், ஆதம்பாக்கம் என்பன சில.
குப்பம் என முடியும் சில ஊர்களில் மணக்குப்பம், தீடீர்குப்பம்', கோனேரிகுப்பம் காட்டுகுப்பம்...
மற்றும் சில ஊர்கள் "திரு" என்பதை முன்னோட்டமாக கொண்டு ஆரம்பிக்கும் அதற்கு ஆதாரத்தை சொன்னால் திருச்சி, திருப்பூர் திருவண்ணாமலை,திருப்பூர், திருத்தணி, திருப்பரங்குன்றம்,திருவெண்ணெய்நல்லூர், திருவரங்கம், திருப்பத்தூர்,என பல உதாரணங்கள்.
*எண்ணம் எழுத்து: நூரேஸ்கே (எ)காதர் - அமீரகம்*
கோடு??
ReplyDeleteஇந்தியாவில் மலை என தொடங்கும் முடியும் ஊர் பெயர்கள் வேண்டும்
ReplyDelete